இந்து சாஸ்திரம்
1.அடிக்கடி
புண்ணிய தர்ம காரியங்களைச் செய்யும் போது புத்தி வளரும். புத்தி வளரும் போது
புண்ணியதிதைக் தவிர பாவத்தைச் செய்ய மனம் வராது. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும்
மனதை அடக்கி, கோபத்தைக் குறைத்து தெய்வ நம்பிக்கையுடன் தான தர்ம புண்ணியங்களைச்
செய்துவர வேண்டும்.
2. ஒருவன் நல்ல வழியில் சம்பாதித்த பணம் தனனைவிட்டுப் போவதற்கு முக்கிய
காரணங்கள் இரண்டு என்பதை அறிவாளிகள் உணர வேண்டும். அதில் ஒரு காரணம்
நல்லவனுக்குக் கொடுக்காமல் இருப்பதும், மற்றொன்று
அயோக்கியனுக்கு கொடுப்பதும் ஆகும்.
3.ஈரத்துண்யுடனும், துண்டுடனும், சாப்பிடுவது கூடாது. தெருக்கதவை சாத்தாமனும், சந்திரனின்
நிழலிலும், கொள்ளிக் கட்டையின் வெளிச்சத்திலும், நடுநிசியிலும், பிரடதோஷ காலத்திலும், இருட்டிலும், திறந்த மாடியிலும் சாப்பிடுவதைத்
தவிர்க்க வேண்டும். ஆனால் பொளர்ணமியன்று நிலா சாப்பாடு தனியாக சாப்பிடாமல்
பலருடன் கூடி சாப்பிடலாம்.
4.உன்னைவிட அதிருஷ்டம் குறைந்தவனிடம் உன் இன்பத்தைப் பற்றிப் பேச
வேண்டாம். அது அவனை துன்புறுத்துவதற்கு ஒப்பாகும்.
5.ஸ்தீரிகள் ஆண்களுடனும், ஆண்கள் ஸ்தீரிகளுடனும்
அருகருகே அமர்ந்து உண்ண்க் கூடாது. கணவன் மனைவி இருவரும் சேர்ந்து உண்ணக்
கூடாது. கணவன் சாப்பிட்டு முடிந்த பின்பே மனைவி உல்கொள்ள வேண்டும். விகாக
சமயத்திலும், பந்தியிலும், யாத்திரை
சமயத்திலும், வழிப்பயணத்திலும், மனைவியுடன்
சேர்ந்து உண்ணலாம்.
6.புயல் காற்று அடிக்கும் போது, இது அரசமரம் இதுஆலமரம் என்று அறிய முடியது. அது போல் தான் உண்மை ஞானம் என்னும் புயல் காற்று அடிக்கும் போது ஜாதி வித்தியாசத்தைக் காண முடியது. ஆத்மாஉவுக்கு ஜாதி கிடையது என்பதை அறியவும்.
7.பொய் சொல்லவே கூடாது என்ற போதிலும் மனைவியின் கற்பை காப்பாற்றும்
பொழுதும், தன் உயிருக்கும், பிற
உயிருக்கும், பொருளுக்கும் ஆபத்து வரும்போதும், பொய் கூறுவதில் தவறு இல்லை இப்படிப்பட்ட
சந்தர்ப்ப்த்தில் பொய் சொல்லிவிட்டால், அதற்குப் பரிகாரமாக
மீனுக்குப் பொரியும், பசுமாட்டிற்குப் புல்லும், ஏழைக்கு வஸ்திரமும் கொடுலக்க வேண்டும்.அதனால் அப்படிப் பொய் சொன்ன பாவம்
நிவர்த்தியாகிவிடுகிறது
8.பல் துலக்கிய உடன் குச்சியை அலம்பி தென்மேற்கு மூலையில் அல்லது ஓடும் தண்ணீரில் விட வேண்டும். பல் துலக்க குச்சி கிடைக்காத சமயம் வாயை பத்து முறை கொப்பளித்தால் பல் துலக்கியதற்குஸச் சமமாகும்.கோவிலில், கொட்டிலில், யாகம், ஹோமம் செய்யுமிடத்தில், ஜலத்திற்குள், இருந்து பல் துலக்கக் கூடாது. துளசி பத்திரதிதை பழிப்பவனும் துளசிச் செடியை காலால் மிதித்தவனும் விஷ்ணுவின் வருத்தத்துக்கு ஆளாகிறார்கள். துளசிச் செடி இருக்கும் வீட்டில் விஷ்ணு பகவான் தன் தர்ம பத்தினியான சகல ஐஸ்வர்யங்களையும் கொண்ட் மகாலட்சுமியுடன் வாசம் செய்கிறார்.
9.கோவிலுக்குள் செல்லும் பக்தன், முதலில் கோபுரத்தை
வணங்க வேண்டும்.பின்பு கொடி மரத்தை அண்ணார்ந்து பார்த்து வண்ங்க வேண்டும்.அதாவது
மனிதனின் எண்ணங்கள் உயர்ந்து இருக்க வேண்டும்.தாழ்ந்த மனப்பான்மை கூடாது.
பக்தர்களின் நிலையும் தாழ்ந்து விடாமல் உயர வேண்டும் என்ற தாத்பர்ய்மே கோபுர,
கொடி மர தரிசனம் ஆகும்.
|
எனது வலைப்பதிவு பட்டியல்
எனது வலைப்பதிவு பட்டியல்
வெள்ளி, 30 மே, 2014
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
